tamilnadu

200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி

சிம்லா,ஏப்.28- இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் தல்ஹவுசி பகுதியில் இருந்து பஞ்சாப்பின் பதன்கோட் பகுதிக்கு சனிக்கிழமையன்று மாலை தனியார் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்து சம்பா மாவட்டத்தில் உள்ள பன்ச்புலா அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;