tamilnadu

img

...ஒரு சந்திப்பே நம்மை நடுங்க வைத்துவிடும்... - பா.ஜான்சிராணி

இந்திய நாட்டில் சுமார் 10 கோடிப் பேர் பல்வேறு விதமான பாதிப்புகளால் மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஐ.நா. சபை கன்வென்சன் முடிவின் படி இந்தியாவின் மாற்றுத்திறனாளிகளில் கவுரமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும், உரிமைக ளும் நிலைநாட்டப்படுமென்பதை ஏற்று கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.  இந்நிலையில், இந்திய நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 1995-க்கு பதில் புதிய சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கை, மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு விதமான தொடர் போராட்டங்களுக்குப் பிறகே நாடாளுமன்றத்தில் 2016 டிசம்பரில் கொண்டு வரப்பட்டு, சட்ட வடிவம் பெற்றது.  இச்சட்டம் இந்திய மாற்றுத்திறனாளிகளைப் பொருத்த மட்டில், “வாராது வந்த மாமணி போல” மிகப்பெரும் வர வேற்பைப் பெற்றது. சட்டம் இயற்றப்பட்டு விட்டால், அச்சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பும் வேகமும் தீவிரமும் காட்டுமென எதிர்பார்த்திருந்தனர். 

நடந்தது என்ன?

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற பதவி ஆசை உச்சத்துக்கு ஏறிய நிலையில், தங்களது ஆட்சிக்காலத் தில் கொண்டு வரப்பட்ட ‘புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமை கள் சட்டத்திற்கு’ விரோதமாக பிரதமர் மோடி அவர்களே, ஊனத்தை அரசியல் நையாண்டிக்கு பயன்படுத்தினார் என்பது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக அரசு மாற்றுத்திறனாளி களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என எதிர்பார்த்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்கான பல சட்டங்க ளையும், சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்த மோடி அரசு, இச்சட்டங்களின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லையே, ஏன்?.

குறிப்பாக, புதிய கல்விக்கொள்கை குறித்த வரைவு அறிக்கை தயாரிப்பில் பல்வேறு துறையினரின் கருத்துக் களை கேட்டறிந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உரி மைகளுக்காகப் பணியாற்றும் எந்த அமைப்பின் பிரதிநிதி யையோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான அமைச்சக மான மத்திய, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் துறை அமைச்சகத்தையோ, மத்திய ஊனமுற்றோர் நலத் துறை யையோ, தேசிய அறக்கட்டளை அமைப்பையோ, மாற்றுத்திற னாளிகளின் கல்வியை ஒழுங்காற்று அமைப்பான இந்திய மறுவாழ்வு மையத்தையோ இந்த புதிய கல்விக்கொள்கைக் கான வரைவு அறிக்கை தயாரிப்பில் பங்கேற்க செய்யவில்லையே என்பதிலிருந்து, இந்த அரசு மாற்றுத்திறனாளிகளின் எவ்வித பாதிப்பு பற்றியும் கவலைப்படாத அணுகுமுறையையே கையாளுகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. புதிய கல்விக்கொள்கை என்பது மாற்றுத்திறனாளி குழந் தைகளை கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்கிற  புரிதல் கூட இல்லையே,ஏன்?

4 சதவீத வேலைவாய்ப்பு எங்கே?

மேலும், மாற்றுதிறனாளிகளின் உரிமைச்சட்டம் 2016ன்படி, போராடிப் பெற்ற வேலைவாய்ப்பு 4 சதவிகிதம் என்பதும் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. எல்லாம் தனி யார்மயம் என்பதோடு இருக்கும் வேலைகளும், காண்டி ராக்ட் அடிப்படையில் திருப்பி விடப்படும் நிலையில் மாற்றுத்திற னாளிகளுக்கு 4 சதவிகிதம் வேலைவாய்ப்பை எங்கே தேடு வது? இவை போதாதென்று பட்ஜெட்டில், மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகரணங்கள் இன்றுள்ள சூழலில் தரம் மேம்படுத்தப்பட்டவையாக, தேவைப்படுகிற நிலையில் வெறும் 6.8 கோடி ரூபாய் நிதி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதும், தொழில்நுட்ப உபகரணங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதும், மாதாந்திர உதவித் தொகைக்கான மத்திய அரசின் பங்களிப்பாக வழங் கப்பட்டு வந்த ஒரு நபருக்கான உதவித் தொகை ரூ.300 என்ப தைக் கொஞ்சமும் அதிகரிக்காமல் அப்படியே கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளதும், மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பில் மத்திய அரசு மண்ணை அள்ளிப்போட்டுள் ளது என்ற வயிற்றெரிச்சலுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ஜாடிக்கேற்ற மூடியாக பாஜக அரசின் முன்மொழிதலை அப்படியே வழிமொழியும் அர சாகவே உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வேதனைகளை, சிரமங்களை அக்கறையாக அணுகும் நிலை கூட தமிழ கத்தில் இல்லை என்பதே உண்மையாகும்.

முதுகுத்தண்டுவடம் பாதித்தவர்கள்...

குறிப்பாக, தமிழக மாற்றுத் திறனாளிகளில் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் படும் வேத னைகள் சொல்லில் அடக்க முடியாது. மற்ற மனிதர்களைப் போல சாதாரணமாக செயல்பாடுகளைக் கொண்ட இம்மனி தர்களுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே, முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக மாற்றப் பட்டுள்ள இவர்கள் வாழ்க்கை நரகமானது. இவர்களுக்கு இடுப்பு பகுதிக்கு மேலிருந்தோ, கீழிருந்தோ உடலின் பாகங்கள் செயல்படாது. சாதாரண மனித வாழ்க்கை யில் பழக்கப்பட்ட இவர்களுக்கு உணர்ச்சிகளும், ஆசா பாசங்களும் அப்படியே நீடிக்க, உடல் உறுப்புகள் மட்டும் ஒத்துழைக்க மறுக்க, இவர்களின் இரவுகள் மட்டுமல்ல, பகலும் சித்ரவதையே. தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள முடியாத சூழலும், தனது வேலைகளை தானே செய்து கொள்ள முடியாத நிலையும், இயற்கை உபாதைகள் கழிப்பது உள்ளிட்டவை கூட இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவது என அசிங்கம், அவமானம், நாற்றம், இயலாமை, தாம்பத்ய உறவுக்கு ஏங்கும் உணர்ச்சிகள்- இத்தனையும் சேர்ந்து இவர்களை வீட்டுச் சிறைக்குள் பல வருட துயரமான வாழ்க்கைக் குள் தள்ளிவிட்டுள்ளது. தாயோ, மனைவியோ, பிள்ளைக ளோ, கணவரோட கூட சகித்துக் கொள்ள முடியாமல் கைவிட்ட வர்களும் உண்டு. இவர்களில் பலரும் தற்கொலை முயற்சி யில் தோல்வியுற்றவர்களே.

குடும்பமும், சுற்றமும் கைவிட்ட நிலையில் இவர்களும் வாழ முடியும் என்ற நம்பிக்கையும், ஆதரவும் தர வேண்டி யது அரசின் கடமையே. ஆனால் தமிழக அரசு இவர்களின் வித்தியாசமான பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கேற்ப உதவி செய்ய எவ்வித முயற்சியும் இல்லை என்பதே வேதனை யான விஷயம். குறிப்பாக இவர்கள் பயன்படுத்தும் யூரின் பேக், யூரின் டியூப் இதை பொறுத்துவதற்கான ஜெல், கையுறை, 20 மி.லி. ஊசி, குளுக்கோஸ் பாட்டில், காட்டன், பேண்டேஜ் துணி, பிளாஸ்திரி, படுக்கை புண் ஏற்படாமல் இருக்க காற்று (அ) தண்ணீர் படுக்கை, வீட்டிற்குள்ளேயே கழிப்பறைக்கு செல்லக் கூட தேவைப்படும் சிறப்பு வீல்சேர், வெஸ்டர்ன் கழிப்பறை, இவை தவிர மருந்து, மாத்திரைகள், பெண்களாக இருந்தால் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பேடுகள், மாதாந்திரம் மருத்துவரை சந்திக்க வாய்ப்புகள் இவையனைத்தும் அத்தி யாவசிய தேவையாக உள்ளது.

செத்துச் செத்துப் பிழைக்கும் பயங்கரம்

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி களுக்கு இரவில் தூங்கும் போது கூட பிரச்சனை தான். உணர்ச்சியற்ற இவர்களின் உடல் பகுதிகளில் எறும்பு, எலி போன்றவை பிய்த்து தின்றுவிட தினம் தினம் மொய்த்து விடு வதால் அதிலிருந்து தப்பிக்க பூச்சி மருந்துகளை தன்னைச் சுற்றி வளையம் போல போட்டிருந்தால் மட்டுமே தூங்க முடியும். இல்லை என்றால் இவைகள் கடித்து ரத்தக்காயம் ஏற்பட்டாலும் இவர்களுக்கு தெரியாது. ஏன் ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டினாலும் இவர்களுக்கு எதுவும் வலி தெரியப் போவதில்லை.

இப்படி செத்துச் செத்துப் பிழைக்கும் மாற்றுத் திறனாளி களுக்கு தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை குறைந்த பட்சம் ரூ. 5000/- ஆவது தேவை. மேலும் அரசு மருத்துவ மனைகளில் இவர்களுக்கென மருத்துவ மற்றும் பயன் படுத்தும் அனைத்து மருத்துவம் சார்ந்த பொருட்களும் இலவ சமாக கிடைக்க வேண்டும். மேலும் இதை உறுதிப்படுத்தி னால் தான் இவர்களும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட முடியும். இவர்களுடன் ஒரு சந்திப்பே நம்மை நடுங்க வைத்து விடும் சூழலில், இவர்களின் வாழ்க்கை பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாத மத்திய, மாநில அரசுகளே, உங்களின் மனிதமும், மன சாட்சியும் எங்கே போனது என்கிற இவர்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

கட்டுரையாளர்:  மாநிலத் தலைவர், தமிழ்நாடு  அனைத்து வகை  மாற்றுத் திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்