tamilnadu

img

அரசு மருத்துவமனையில் பணியாற்ற 8 திருநங்கைகள் பணி நியமனம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல் பணிபுரிய 8 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து  தலைமை செயலகத்தில்  சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணையை வழங்கினார்.