tamilnadu

குடும்பத்துக்கு 2 குடம் தண்ணீர்

ஸ்ரீகாகுளம், ஜூன் 10 - ஆந்திர மாநிலம் சீதாநகரத்தில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.  இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் குமார் கூறுகையில்,  எங்கள் கிராமத்தைச் சேர்ந்த  இளைஞர்களுக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த  குடும்பத்தினர் பெண் கொடுக்க மறுத்துவிடுகின்றனர்.  இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால், கிராமத்தில்  இருந்து 4 கி.மீ. தொலைவில் போர்வெல் போட்டு ஒரே ஒரு டேங்கில் தண்ணீர் நிரப்பி கிராம மக்களுக்கு வழங்கப்படு கிறது. அதிலும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீரே கிடைக்கிறது. தண்ணீர் இல்லாமல் சில நேரங்களில் குளிப்பதைக் கூட தள்ளிப் போடுகிறோம். குடிக்க மட்டுமே தண்ணீர் வாங்க முடிகிறது. சமைக்க உவர்ப்பு தண்ணீரையே பயன்படுத்துகிறோம் என்றார்.