புதுதில்லி, ஜுன் 15- அருணாசலப் பிரதேசத்தில் விமா னப்படை விமானம் விழுந்து நொறுங்கி யதில் பலியான 13 பேரில் மூன்று பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அம்மாநிலம் சோகத்தில் மூழ்கி யுள்ளது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன் 32 ரக விமானமொன்று, கடந்த 3ஆம்தேதியன்று அசாம் மாநிலம் ஜோர்கட் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டது. அருணாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள மெசுகா வுக்குச் சென்ற இவ்விமானம், சுமார் அரை மணி நேரத்தில் ராடார் கண்கா ணிப்பில் இருந்து காணாமல்போனது. அந்த விமானத்தைத் தேடும் பணி யில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. கடந்த 11ஆம் தேதியன்று அருணா சலப் பிரதேசத்திலுள்ள சியாங் மாவட்டப் பகுதியில் உடைந்த விமா னத்தின் பாகங்கள் கிடந்தது கண்டறி யப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரமுள்ள பகுதி யில் இருந்ததாலும், மோசமான வானிலையாலும் மீட்புக்குழுவினர் அந்த இடத்துக்குச் செல்வது தாமத மானது. கடந்த 13ஆம் தேதியன்று சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழு, விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்தது. தற்போது விமானத்தின் கருப்புப் பெட்டியும், பலியான வீரர்களில் 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள் ளன. தொடர்ச்சியாக அப்பகுதியில் மழை பெய்துவருவதால், மீதமுள்ள சடலங்களைத் தேடும் பணியில் இடை வெளி ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மலை யேற்ற வீரர்களின் ஒத்துழைப்புடன் தற்போது சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் பலியான 13 பேரில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வர்கள். திருச்சூர் மாவட்டர் பெரிங் கண்டூரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவ ரின் மகன் வினோத் இந்த விபத்தில் பலியானார். இவர் தனது குடும்பத்தி னருடன் கோவையிலுள்ள சிங்கா நல்லூரில் வசித்து வந்தார். கொல்லம் மாவட்டம் அஞ்சால் பகுதியைச் சேர்ந்த அனூப்குமாரும் இதில் உயிரிழந்தார். இவர் தனது மனைவி குழந்தையுடன் ஜோர்கட் விமானப்படை தளம் அருகே வசித்து வந்தார். கன்னூர் மாவட்டம் அஞ்சரகண்டி யைச் சேர்ந்த ஷரின் என்பவரும் இந்த விமானவிபத்தில் பலியானார். மூன்று வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பப் படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பலியான வீரர் களுக்கு இரங்கல் தெரிவித்து இது வரை பிரதமர் நரேந்திர மோடி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர், முப்ப டைகளைச் சேர்ந்த வீரர்களின் பெருமை பேசிய கட்சிகள் இப்போது மவுனமாக இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களுக்காக பேனர் வைத்த வர்கள் இப்போது இந்த விபத்து குறித்து சிறு குறிப்பு கூட வெளியிடவில்லை என்று பாதுகாப்புப் படைகளில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.