தஞ்சாவூர் நவ.5- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டி னத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர் கள் உள்ளனர். இவர்கள் படகுகளில் கடலு க்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் திங்கட் கிழமை பகல் முழுவதும் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு முதல் திடீரென கடும் பனிப் பொழிவு இருந்தது. இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து விட்டு வழக்கமாக காலை 8 மணிக்கு கரை திரும்புவார்கள். கடல் பகுதி யில் திடீரென மூடுபனி அதிகரித்ததால் கடல் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. காலை 10 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் மீனவர்கள் கரை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. கடலில் பனியில் நனைந்தவாறு இருந்தனர். பின்னர் பனி விலகிய பின் அங்கிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு கரைக்கு திரும்பினர். மேலும் மூடுபனியால் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர். பனிப் பொழிவு காலை 10 மணி வரை நீடித்தது.