tamilnadu

img

சாலையை பயன்படுத்த கிராம மக்களுக்கு தடை தஞ்சை ஆட்சியரகம் முற்றுகை

தஞ்சாவூர், ஆக.19- தஞ்சையை அடுத்த இனத்துக்கான் பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு திங்கள்கிழமை ஆட்சியர் அலுவல கத்தில் மனு கொடுக்க வந்தனர். அப் போது காவலர்கள் அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சி யர் அலுவலக வளாகத்தின் உள்ளே அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து காவல்துறையினர் அவர்களை சமதானம் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேலி டம் மனு அளிக்க அழைத்து சென்றனர். கிராமத்தினர் அவரிடம் தங்களின் கோரிக்கையாக மனு அளித்தனர். இதையடுத்து கிராமத்திற்கு தேவை யான வசதிகளை செய்து தர ஏற்பாடு கள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கிளம்பிச் சென்றனர். கிராமத்தினர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் இனத்துக்கான் பட்டி கிராமத்தில் உள்ள சுமார் 1500 ஏக் கர் விவசாய விளை நிலங்கள் 1995ஆம் ஆண்டு விமானப்படை ஓடுதளம் அமைக்க கையகப்படுத்தப்பட்டது. மேலும் எங்கள் கிராமம் இனத்துக் கான்பட்டியிலிருந்து தஞ்சைக்கு சென்று வந்த தொடர்பு வழிச்சாலையை 2011ஆம் ஆண்டு தடை செய்து விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது.  இதற்கிடையில், மாவட்ட ஆட்சிய ரும், விமானப்படை அதிகாரிகளும் தங்கள் கிராம மக்களை அழைத்து பேசி, எங்களுக்கு மாற்று இடம் தரும் வரையில், அவர்களுக்கு என போடப் பட்டுள்ள தார்ச் சாலையை, கிராம மக் கள் பயன்படுத்தி வரலாம் உத்தரவிட்ட னர். தற்போது எங்களை கடந்த 16ஆம் தேதியிலிருந்து, தஞ்சைக்கு சென்று வந்த பாதையை ராணுவ அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இதனால் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் உள் ளேயே முடங்கியுள்ளோம். பள்ளி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், வெளியூரில் கூலி வேலைக்கு போக முடியாமலும், உடல் நிலை சரியில்லை என்றால் கூட வாடகை ஆட்டோ மற்றும் வாகனங்க ளும், எங்கள் கிராமத்தில் யாரேனும் இறப்பு ஏற்பட்டாலும் எங்கள் உற வினர்களை அனுமதிக்காமல் ராணுவ அதிகாரிகள் தடை செய்து விட்டனர்.  இதனால் நாங்கள் வாழ தகுதி யின்றி தத்தளித்து வருகிறோம்.  நாங் கள் பயன்படுத்தி வந்த சாலையை எங்கள் கிராமம் அமைக்கும் வரை அந்த சாலையை பயன்படுத்தி வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்கள் கிராம மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.  இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.