கும்பகோணம், நவ.6- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 40 ஆவது அமைப்பு தினத்தை முன்னி ட்டு கும்பகோணம் ஒன்றியம் இணை பிரியாள்வட்டம் கிளையில் ‘டெங்கு வை கட்டுப்படுத்துவோம்’ என்ற பெயரில் கிராமத்தை தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மக்க ளுக்கு பயனில்லாமல் இருக்கும் தண்ணீர் மோட்டாரினை இரண்டு நாட்களுக்குள் சரி செய்வதற்கும் ஊராட்சி செயலர் செந்தில்குமாரிடம் மனு அளிக்கப் பட்டது. நிகழ்விற்கு கிளைச் செயலாளர் அஜித் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ராமன், ஒன்றியத் தலைவர் தமிழினியன், கிளைத் தலைவர் ராகின், பொருளாளர் விக்னேஷ் மற்றும் கிளை உறுப்பினர்கள் கிராமத்தை தூய்மைப்படுத்தினர்.