தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக கடந்த ஆண்டு ஜி.பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன் விதிமுறைகளை மீறி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது, அப்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.