1978-களில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந்த போது கும்பகோணம் தாலுகாவில் மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளராகவும், திருபுவனம் பட்டு கூட்டு றவு சங்கம் உருவாக கடுமையாக உழைத்து சங்கத்தின் வளர்ச்சிக் கும் அதன் மூலம் நெசவாளர்க ளுக்குண்டான உரிமையை பெற்று தந்து சங்கத்தின் இயக்கு னராகவும், தமிழ்நாடு கைத்தறி சம்மேளன துணை செயலாளராகவும், திருபு வனம் பகுதியில் நெசவாளர்களின் கூலிப் பிரச்சனை முதல் சமூக பிரச்சனைகளுக்கு போராட்டத்தின் மூலம் வெற்றி கண்ட பார்த்தசாரதி, கோ.வீரையன், வி.நடராஜன் போன்ற தலைவர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட் தோழர்கள் மட்டுமல்லாமல் சாதி மத பேதமின்றி அனைவராலும் ப.க என்று அன்போடும் அழைக்கப்பட்டவர் தோழர் ப.கருணாநிதி ஆவார். இப்பகுதியில் உள்ள மக்கள் இல்லங்க ளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளி லும் கலந்து கொண்டு தொழிலாளர்கள் நெஞ்சம் நிறைந்தவர் நெருக்கடி காலங்க ளிலும் உழைப்பாளி நெசவாளர் மக்களை பாதுகாப்பதற்கு சளைக்காமல் சிறை வாசம் அனுபவித்தவர். குறைந்த கல்வியே படித்தவர் என்றா லும் திருபுவனம் கூட்டுறவு பள்ளியை (திகோ மெட்ரிகுலேசன் பள்ளி) தொடங்க முயற்சி எடுத்து அதற்கான அறக்கட்டளை யின் தலைமை பொறுப்பாளராக இருந்து இன்று இப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் புகழ் பெற்ற பள்ளியாக இருப்பதில் தோழர் ப.கவிற்கு பங்கு உண்டு. சிபிஎம் உருவான காலத்திலிருந்து நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இப்பகுதியில் நடக்கும் கள போராட்டங்க ளுக்கு தலைமையேற்றவர். இவரது நல்வழி காட்டலால் பல நெசவு தொழிலாளர்கள் பயன டைந்தனர். அவர் மறைவுக்கு முன் கூலி உயர்வு கேட்டு நடத்திய மாபெரும் போராட்டத் தில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் உணர்ச்சியுடன் உற்சா கத்துடன் பேரணியாக வலம் வந்து ஊரையே ஸ்தம்பிக்க வைத்த நேரத்தில் அப்போதைய ஆட்சியாளர்களால் போராட்டத் தை திசை திருப்ப சதித் திட்டம் தீட்டப் பட்டது. அதையறிந்த ப.க.ஒரு தொழி லாளி கூட பாதிக்கக் கூடாது என்று போராட்ட பேரணியை வேறு பாதையின் திரும்பச் சொன்ன போது உணர்ச்சியின் உற்சா கத்தின் உச்சத்தில் இருந்த தோழர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் அப்போது பேரணியின் முன்னால் கீழே படுத்து மீறிப் போகிறவர்கள் என் மீது ஏறி போகட்டும் என நெஞ்சுரத்தோடு கூறி அத்தனை தொழிலாளர்களையும் காப்பாற்றிய நிகழ்வை சக தோழர்கள் சொல்லும் போதே கண்கள் குளமா கின்றன. இவரை எதிர்த்தவர்களும் ஏற்றுக் கொண்ட வரலாறு படைத்தவர். அப்படி போராட்டக் களத்தில் அவரோடு பங்கு பெற்றவர்களுள் இப்பகுதியில், சா.ஜீவ பாரதி, கே.பக்கிரிசாமி நாகேந்திரன், ராமர் போன்ற எண்ணற்ற மூத்த தோழர்கள் கம்யூனிஸ்ட்களாக இன்றும் இயங்கி வருகிறார்கள். தோழர் ப.க மறைந்து 8 ஆண்டு கள் ஆனாலும் அவர் ஊட்டிய வீரமும், ஈரமும் இன்றும் வழி நடத்துகின்றன.
தொகுப்பு: குடந்தை சு.சரவணன்