தஞ்சாவூர், பிப்.26- தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் எமதர்மரா ஜனுக்கு தனிக்கோவில் உள்ளது. காலத்தால் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் கோவிலுக்குச் சென்ற மர்ம நபர்கள், சுவாமி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை தூக்கிச் சென்று, கோவிலின் அருகே உள்ள வயலில் போட்டு உண்டியலை திறந்து அதிலி ருந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோ வில் நிர்வாகத்தினர், இச்சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு கொள்ளை சம்பவம் இந்த கோவிலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.