tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தேர்வு

தஞ்சாவூர், ஆக.17- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில மாநாடு சனிக்கிழமை யன்று தஞ்சையில் நிறைவு பெற்றது. மாநாட்டில் மாநில சிறப்புத் தலைவராக பி.சம்பத், தலைவராக டி.செல்லக் கண்ணு, பொதுச் செயலாளராக பி. சாமுவேல்ராஜ், பொருளாளராக இ. மோகனா, துணைப் பொதுச் செயலா ளர்களாக கே.சாமிநாதன், யு.கே.சிவ ஞானம், மு.கந்தசாமி, சின்னை பாண்டி யன், பி. செல்வன், துணைத் தலைவர் களாக பி.சண்முகம், எஸ்.கே.மகேந்தி ரன், ஆர்.சிங்காரவேலு, ஜி.ஆனந்தன், பி.சுகந்தி, பி.டில்லிபாபு, எம்.சின்னத் துரை, வி.அமிர்தலிங்கம், ஆதவனின் தீட்சண்யா, ஆர்.கிருஷ்ணன், பி.பி. பழனிசாமி, மாநிலச் செயலாளர்களாக ஜி.ராமசாமி, கணேஷ், டி.செந்தில் குமார், ஜானகிராமன், வாஞ்சிநாதன், எஸ்.பாலா, வி.மாரியப்பன், எம்.பால சுப்பிரமணியன், ஸ்ரீராம், நந்தகோபால், முத்துக்குமார் இவர்களோடு, மண்ணு ரிமை கூட்டமைப்பு தலைவர் நிகோ லஸ், ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு. ஜக்கையன், ஆதித்தமிழர் பேரவை இரா.அதியமான், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட சாதி ஒழிப்பு அமைப்புகளின் தலைவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

 தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3 ஆவது மாநில மாநாட்டின் நிறைவு நாளான சனிக்கிழமை அன்று  தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன், மண்ணு ரிமை கூட்டமைப்பு சி.நிக்கோலஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நடத்தி தந்தவர் களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கேரள முன்னாள் சபாநாயகர் ஆர். ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றி னார். வரவேற்பு குழு செயலாளர் சின்னை பாண்டியன் நன்றி தெரி வித்து பேசினார்.

நீலகிரி இயற்கை பேரிடர் நிதி உதவி 

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு உத வும் பொருட்டு மாநாட்டு அரங்கில் வசூ லிக்கப்பட்ட தொகை ரூ 28 ஆயிரத்து 167 நீலகிரி மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.