தஞ்சாவூர், பிப்.8- தஞ்சை பெரிய கோயி லின் கல்வெட்டுகளை பராம ரிப்பு என்ற பெயரில் சேதப்ப டுத்தாமல், அதன் பழந்தொ ன்மையை பாதுகாக்க வேண்டும் என்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோ வில் கடந்த பிப்.5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடை பெற்றது. இந்நிலையில் கோயிலின் கல்வெட்டுகள் மற்றும் தூண்கள் பராமரிப்பு என்ற பெயரில் உடைத்து சேதமாக்கப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தியது. இதுகுறித்து பெரிய கோயில் வழிபா ட்டுக்குழு சார்பில், வழக்கறி ஞர் வெ.ஜீவகுமார் வியாழ க்கிழமை தஞ்சை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற த்தில் தாக்கல் செய்த மனு வில், “மன்னன் ராஜராஜ சோ ழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் கலை, சிற்பம், ஓவி யம், கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கி றது. இக்கோயிலின் பராம ரிப்பு பணிகள் பல கோடி ரூபாய் செலவில், தனியார் ஒப்பந்ததாரரிடம், தொல்பொருள் துறை ஒப்ப டைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பராம ரிப்பு பணியில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்ததாரர்கள் 4 தமிழ் கல்வெட்டுகளை உடை த்து சேதமாக்கி விட்டனர். மற்ற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் சிற்ப ங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு ள்ளது. இவை பெரிய கோ யில் வளாகத்தில் தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை இயக்குந ருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி புகார் மனு அளித்தோம். தற்போது நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்காக பராமரிப்பு பணி நடைபெற்ற போதும் கல்வெட்டுகள், சிற்பங்க ளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இரு க்கலாம் என அஞ்சுகிறோம். இன்னும் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே பெரிய கோயிலின் தன்மை மாறாமல் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசா ரணைக்கு ஏற்ற நீதிபதி அனிதா கிறிஸ்டின், விள க்கம் கேட்டும், பொது அறி விப்பு செய்ய வலியுறுத்தி யும், இந்திய தொல்லியல் துறை இயக்குநர் (பொது), மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தமிழ்நாடு வட்டக் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோ ருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.