சுவரிடிந்து விழுந்து 17 பேர் பலி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், டிச.4- தஞ்சை மன்னர் சர போஜி அரசு கலைக் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கம் சார்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்லூரி கிளைத் தலைவர் வீரமுத்து தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பி னர் பிடல்காஸ்ட்ரோ முன் னிலை வகித்தார். கிளைச் செயலாளர் சக்திவேல் கண்டன உரையாற்றினார். 17 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும், போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், போராடியவர்கள் மீது போடப் பட்ட பொய்வழக்கை ரத்து செய்து அவர்களை விடு தலை செய்யக் கோரியும், இறந்தவர்களின் குடும்பத்தி ற்கு இழப்பீடு வழங்க வலி யுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரத்த தான முகாம்
தஞ்சாவூர், டிச.4- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். செய லாளர் சி.முத்தரசன் வர வேற்றார். பேராவூரணி செஞ் சிலுவைச் சங்கத்தின் தலை வர் என்.அசோக்குமார் முகா மைத் தொடங்கி வைத்தார். 31 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு தஞ்சை செஞ்சிலு வைச் சங்க ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிறைவாக பொருளாளர் ஜெ.மணிகண்டன் நன்றி கூறினார்.
ஒத்திவைப்பு
கரூர், டிச.4- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தால் டிசம்பர் 6 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற இருந்த ஓய்வூதி யர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகி றது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என கரூர் மாவட்ட ஆட்சி யர் த.அன்பழகன் தெரிவித் துள்ளார்.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் கண்டு கொள்ளாத காட்டாத்தூர் ஊராட்சி
அரியலூர், டிச.4- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் ஊராட்சி காலனி மேலத்தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 450-க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தலித் மக்கள் குடியிருப்பு என்பதால் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் ஊராட்சி ஒன்றியம் செய்து தராமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இப் பகுதி மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு ஊராட்சி செயலாளராக இருப்பவர் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். இவர், தலித் மக்க ளின் சராசரி கோரிக்கையை கூட ஏற்பதில்லை. கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காத போது, அதனையும் அதிகாரிகள் கண்டு கொள்ளமாட்டார்கள். தற்போது பருவமழையால் கடந்த 6 நாட்களாக வீடுக ளுக்குள் தண்ணீர் புகுந்துள் ளது. இதுவரை எந்த அதி காரியும் வந்து பார்க்க வில்லை. புகார் மனு கொடுத் தாலும் பயனில்லை என்ப தால், காட்டாத்தூர் தலித் மக்கள் மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.