tamilnadu

தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூர், நவ.25- தஞ்சாவூர் மாவட்டம் அலிவலம் தொடக்க வேளாண் மை கூட்டுறவு சங்கத்தில் மக ளிர் சுய உதவிக் குழுக்களு க்கு கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத்தலைவர் முருகானந் தம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நடரா ஜன் முன்னிலை வகித்தார்.  குறிச்சி, அலிவலம், காயா வூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூபாய் 17 லட்சத்து 45 ஆயிரத்திற்கான கடன் தொகையினை கூட்டு றவு சங்கத் தலைவர் முருகா னந்தம் வழங்கினார். ஊராட்சி செயலர் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

நீர் சேமிப்பு செயல் விளக்க நிகழ்ச்சி  
தஞ்சாவூர், நவ,25- தஞ்சாவூர் மாவட்டம் நாட்டாணிக்கோட்டை கிராமத் தில் நெல் வயலில் நீர் மறைய நீர் கட்டுதல், தண்ணீர் சேமிப்பு குறித்த செயல் விளக்கம் தஞ்சாவூர் பொன் னையா இராமஜெயம் வேளாண்மை கல்லூரி மாண வர்கள் மூலம் செய்து காண் பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் எஸ். ராணி தலைமை வகித்து, தண்ணீர் சேமிப்பின் முக்கி யத்துவம் பற்றி விவசாயிக ளுக்கு விளக்கவுரையாற்றி னர். செயல் விளக்கங்களை எவ்வாறு கடைப்பிடிக்க வேண் டும் என்பதை விவசாயிகளுக்கு எளிய முறையில் வேளாண்  கல்லூரி மாணவர் சங்கீத் ராஜ் செய்து காண்பித்தார்.
 

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை  
அரியலூர், நவ.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் பிள்ளைப்பாளையம் ஊராட்சி மன்றம் மற்றும் குறுக்கு ரோடு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு ஊறுப்பினர் சி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கே.ராஜா வரவேற்றார். டி.பாலசுப்பிர மணியன், வி.கல்யாண சுந்தரம், டி.ராமச்சந்திரன் ஆர்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப் பினர் கென்யா.மகாராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்என.துரைராஜ், பத்மா வதி ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஒன்றியக்குழு .பூபாலன், டி.அம்பிகா எஸ்.குமார் பல்கீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், நவ.25- திருவாரூர் ஆட்சியர் கூட்ட அரங்கில் திங்கட் கிழமை தோறும் நடை பெறும் மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 339 மனுக்களை அளித்தனர்.  கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்- ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் ஜெயதீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொறுப்பு) பூஷ்ண குமார் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.