tamilnadu

img

மடிக்கணினி கேட்ட மாணவர்களுக்கு “தடியடி பரிசு”

மதுரை, ஜூன் 28 -  மதுரையில் இலவச மடிக்கணினி கேட்டு போராடிய மாணவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்துத் தாக்கினர். மடிக்கணினி கேட்டவர்களை நக்சலைட்டுகள் என்றும் காவல்துறையினர் அபாண்டமாக பழி போட்டனர். மதுரையில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி முடித்த பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி இதுவரை கிடைக்கவில்லை. கிடைக்காத மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு மனுக்கொடுத்து வருகின்றனர். பொறுப்பு ஆட்சியர் எஸ்.சாந்தகுமாரோ மடிக்கணினி குறித்து இதுவரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. 2017-18-ஆம் ஆண்டில் எவ்வளவு மடிக்கணினிகள் வந்தது? அது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? ஏன் பெரும்பாலான மாணவர்களுக்கு வழங்கவில்லை என்பது குறித்து கல்வித்துறையும் மௌனம் காத்துவருகிறது.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அப்பள்ளியில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் படித்த தங்களுக்கு ஏன் மடிக்கணினி வழங்கவில்லை. எங்களுக்கும் வழங்கவேண்டுமென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொறுப்பு ஆட்சியர் எஸ்.சாந்தகுமாரை சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தனர்.ஆனால், நடவடிக்கை இல்லை. இந்தநிலையில் மங்கையர்க்கரசியில் மேல் நிலைக்கல்வி முடித்த மாண வர்கள் ஏராளமானோர் வெள்ளியன்று இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் வேல்தேவா தலைமையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டு, தங்களுக்கு மடிக் கணினி வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர், தங்களது பிள்ளைகளுக்கும் மடிக் கணினி கேட்டுத்தானே மாண வர்கள் போராடுகிறார்கள் என்பதை உணர்ந்து கோரிக் கையை சுமூகமாகத் தீர்க்க முன்வராமல் எடுத்த எடுப்பி லேயே அவர்களை தகாத வார்த்தைகளால் ஏசினர், காவல்துறையின் நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பிய  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வேல்தேவா, சார் லஸ் ஆகியோரை “நீங்கள்  நக்சலைட்டுகள்” என்று கூறி சட்டையைப் பிடித்து தரதர வென இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் வைத்து அலெக்ஸ், சாமுவேல் ஆகி யோர் அவர்களை ஒருமை யில் பேசி கடுமையாகத் தாக்கினர். காவல்துறையின் தடியடிக்கு மங்கையர்க்கரசி முன்னாள் மாணவ-மாண விகளும் தப்பவில்லை. மாண விகள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். பின்னர் வேல்தேவா, சார்லஸ் மற்றும் மங்கையற்க ரசி முன்னாள் மாணவர்கள் ஏழு பேரை கைது செய்து அண்ணா நகர் காவல்நிலை யத்திற்கு இழுத்துச் சென்ற னர். காவல்துறை தாக்கிய தில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வேல்தேவா விற்கு தலை மற்றும் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது.

திருமங்கலம்

மதுரை திருமங்கலத்தில் பி.கே. என். பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கவில்லை. இத னால் அவர்கள் வெள்ளிக் கிழமை நடைபெவிருந்த தேர்வை புறக்கணித்து மறிய லில் ஈடுபட்டனர். மேலும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை கூட கூடுதல் கட்டணம் வசூ லிக்கப்படுவதாகவும், வசூ லிக்கும் தொகைக்கு உரிய ரசீது வழங்குவதில்லை. மாவட்டக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  மாணவி களின் பெற்றோர் வலி யுறுத்தினர்.  

-நமது நிருபர்கள்