tamilnadu

img

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கல்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, நகர எம்ஜிஆர் மன்ற அலுவலகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது சொந்தப் பணத்தில் இருந்து 41 பேருக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன், பேராவூரணி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.