tamilnadu

img

நிவாரணப் பொருட்களை வழங்கல்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நல்லவிநாயகபுரம், கடைக்கண்விநாயகநல்லூர், சீயாளாம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்டச் செயலாளர் நிவேதாமுருகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வக்கில் பன்னீர்செல்வம், டாக்டர் பன்னீர்செல்வம், ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேது ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஊராட்சித் தலைவர்கள் நாகராஜன், இளவரசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் விஜயபாரதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.