tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டை சாதிய ஒழிப்பு பறையாக மாற்றுவோம் பி.சம்பத் அறைகூவல் 

 கும்பகோணம், ஆக.6- வருகின்ற ஆகஸ்ட் 15, 16 17 தேதி களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு தஞ்சையில் நடைபெறு வதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகர ஒன்றியம் திருவிடைமருதூர் தெற்கு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பாக நிதி அளிப்பு மற்றும் ஆலோ சனை கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது  கூட்டத்திற்கு கட்சியின் நகர செய லாளர் செந்தில்குமார் தலைமை ஏற்றார். சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் சின்னை.பாண்டியன், மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் மாநாடு குறித்து பேசினர். அப்போது மத்திய குழு உறுப்பினர் சம்பத் பேசிய பொழுது ஒடுக்கப்பட்ட மக்களின் குர லாய் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளி லும் எங்கெல்லாம் தீண்டாமை கடை பிடிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் முன்னணி முன் நின்று எதிர்ப்புகளை உடைத்து தீண்டாமைக்கு எதிராக போராடி வருகிறது. இதனால் எண் ணற்ற தலைவர்களை இழந்த போதி லும் சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க முனைப்போடு செயல்பட்டு வருவது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீண்டாமை கொடுமைக்கு எதிராக எவ்வித சமரசமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போரா டிய பி.சீனிவாச ராவ், தஞ்சை வெங்க டாச்சலம் போன்ற போராளிகள் வாழ்ந்த மண்ணில் தஞ்சையில் வருகிற ஆகஸ்ட் 15 ,16, 17 தேதிகளில் மாநில மாநாடு நடைபெறுகிறது இம்மாநாட்டில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஆகவே இம்மாநாடு சாதிய ஒழிப்பு பறையாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர் சி.நாகராஜன், வரவேற்புக் குழு செயலாளர் பழ. அன்புமணி, குடந்தை ஒன்றியச் செய லாளர் பி.ஜே.ஜேசுதாஸ், திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி, தெற்கு ஒன்றியச் செய லாளர் பழனிவேல் மற்றும் எல்ஐசி ஊழி யர் சங்கம் சேகர், ஓய்வூதியர் சங்கம் ஆர்.ராஜகோபாலன், அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் எம்.கண்ணன் மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாநாட்டு நிதி வழங்கினர். மேலும் கும்பகோணம் திருவிடை மருதூர் ஒன்றியங்களில் இருந்து திர ளான மக்களைத் திரட்டி பேரணியில் கலந்துகொண்டு மாநாடு வெற்றி அடைய பாடுபடுவது என உறுதி அளித்தனர்.