தஞ்சாவூர் டிச.14- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனரா ஜன் தலைமை வகித்தார். அரசு கல்லூரி முன்னாள் முதல்வர், ‘பாரதியார் கவிப்பணித் தொண்டர்’ முனைவர் சிவ.கார்த்திகேயன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றி னார். முன்னதாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரி யர் சி.இராணி வரவேற்றார். விழாவில் துறைத் தலைவர்கள் ராஜ்மோகன், பழனிவேல், உடற்கல்வி இயக்குநர் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் இல.அருள் குமார் மாணவிகளின் பாதுகாப்புக்காக காவலன் எஸ்ஓஎஸ் செல்போன் செயலியைப் பயன்படுத்து வது பற்றிய செயல்விளக்கம் அளித்தார்.