tamilnadu

img

பேராவூரணி வட்டத்தில் தனி மணல் குவாரி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் ஞாயிற்றுக்கிழமை மணல் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) அமைப்புக் கூட்டம் பட்டுக் கோட்டை சங்கத் தலைவர் என்.சக்தி வேல் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப் பையா வரவேற்றார். அமைப்பு சாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சிஐடியு நிர்வாகி ஆர். எஸ்.வேலுச்சாமி, நீலமோகன், வே. ரெங்கசாமி, ராஜாமுகமது, எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் சங்கத்தை துவக்கி வைத்துப் பேசினார்.  கூட்டத்தில் சங்கத் தலைவராக செங்கமங்கலம் கே.ஆர்.எம்.ராமநா தன், செயலாளராக கொரட்டூர் வி. நீலகண்டன், பொருளாளராக கழனி வாசல் சூர்யா, துணைத் தலைவர்க ளாக ஊமத்தநாடு எம்.மகேந்திரன், நெல்லியடிக்காடு எஸ்.ராஜா, துணைச் செயலாளர்களாக தொந்து புளிக்காடு எஸ்.ராஜேந்திரன், அம்மையாண்டி வீ.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். பேராவூரணி வட்டத்தில் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்களு க்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.