அரியலூர், ஆக.28 - அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட மணல் குவாரி அமைத்து தரக்கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியரிம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அரசு மூலம் வழங்கப்பட்ட பசுமை வீடு, கான்கிரீட் வீடு உள்ளிட்ட கட்டுமான தொழில்கள் பாதிக்காமல் இருக்க, மணல் குவாரி அமைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களையும் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய போது, உத்தரவாதம் கொடுத்த மாவட்ட நிர்வாகம் கோரிக்கையினை நடைமுறைப்படுத்தாமல் கால தாமதப்படுத்தி வருகிறது. புதிதாக மாற்றம் பெற்று வந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் வினயிடம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.