கும்பகோணம், மார்ச் 18- கும்பகோணத்தில் அடுத் தடுத்து நடந்த வழிப்பறிக் கொள்ளை வாகனம் ஓட்டி வந்த இரு வியாபாரிகளே தாக்கி பணம் மற்றும் செல் போன் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது கும்பகோணம் மேலக் காவேரி வைக்கல் கட்டு கார தெரு பகுதியை சேர்ந்த ஆறு முகம் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை மேலக்காவேரி பெரும் மாண்டி இடுகாடு வழியாக மீன் வியாபாரத்திற்காக வைத்திருந்த ரூபாய் 5,330 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனுடன் செல்லும்போது முகமூடி அணிந்த சில நபர்கள் வழி மறித்து வியாபாரி ஆறு முகத்தை உருட்டு கம்பியால் தாக்கி பணம் மற்றும் செல் போனை பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர் . அதே மேலக்காவேரி விளாங்குடி செட்டிகுளம் பகுதியை சேர்ந்த அஸ்ரப் அலி கறி வியாபாரத்தில் ஈடு பட்டு வருகிறார். மேலக்கா வேரி ஆழ்வான் கோவில் தெரு பகுதியில் கரி வியாபா ரத்திற்காக வைத்திருந்த ரூபாய் 6,750 மற்றும் செல் போனுடன் சென்ற போது முகமூடி அணிந்த அதே மர்ம கும்பல் உருட்டு கம்பி யால் அஷ்ரப் அலி தாக்கி பைக் சாவியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ள னர். இந்த இரு சம்பவமும் அடுத்தடுத்து நடந்துள்ள தால் அப்பகுதி மக்களிடை யே பெரும் பதற்றம் ஏற்பட் டுள்ளது. இதுதொடர்பாக கும்ப கோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சம்பந்தப் பட்ட அசரப் அலி மற்றும் ஆறுமுகம் புகார் அளித்துள் ளனர். புகாரை தொடர்ந்து கும்பகோணம் கிழக்கு காவல் துறை போலீசார் வழக்கு தொடர்பாக விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.