tamilnadu

அனுமதியின்றி இயங்கிய  39 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல்

தஞ்சாவூர், மார்ச் 1- உரிய அனுமதியின்றி இயங்கிய 39 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு தஞ்சாவூர் அதிகாரிகள் சீல் வைத்தனர். நிலத்தடி நீர் எடுக்க உரிமம் இல்லா மல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்று தமி ழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை யின் நிலத்தடி நீரியியல் பிரிவு செயற்பொறியாளர் கே.வசந்தி உள்ளிட்ட அதிகாரிகள் தஞ்சாவூர் பள்ளியக்ர ஹாரம், சாந்தப்பிள்ளைகேட் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 13 கேன் குடி நீர் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு நடத்தி னர். இதில் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி செயல்பட்டதாக கூறி அந்த 13 ஆலைகளில் பூமியிலிருந்து தண்ணீர் உறிஞ்சும் போர்வெல் குழாயை துண்டித்து மூடி சீல் வைத்தனர்.  இதே போல் கும்பகோணம் பகுதி திரு வலஞ்சுழி, வளையப்பேட்டை உள்ளிட்ட 11 இடங்களில் இயங்கி வந்த கேன் குடி நீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்த னர். பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி யில் இயங்கி வந்த 15 உற்பத்தி ஆலை களுக்கு சீல் வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 39 கேன் குடிநீர் உற்பத்தி ஆலை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் கேன் குடிநீருக்கு தட்டுப் பாடு ஏற்பட்டு, ரூ.30-க்கு விற்பனையான 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண் ணீர் கேன் தற்போது ரூ. 50 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.