தஞ்சாவூர், மார்ச் 11- சேதுபாவாசத்திரம் அருகே முகத்து வாரத்தில் மணல் திட்டுகள் உள்ள தால், படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமலும் கரைக்கு கொண்டு வர முடியாமலும் மீனவர்கள் தவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மீன வர்கள் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபா வாசத்திரம் அருகிலுள்ள கொள்ளு க்காடு ஊராட்சிக்குட்பட்ட அந்தோணி யார்புரம், அம்பேத்கர் நகர் மற்றும் சின்ன ஆவுடையார் கோவில் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடு ம்பங்கள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதான தொழி லாக செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அன்றாடம் கடலுக்குச் சென்று மீன்பிடித்து, அதில் வரும் வரு மானத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். சுமார் 80 பைபர் படகுகள் மூலம் மீன்பி டித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றவர்கள் கூலி மீனவ தொழிலா ளர்கள். இந்நிலையில் கடந்த சில மாத ங்களாக அக்னி ஆற்றின் முகத்துவாரம் ஆற்றில் இருந்து வரும் நீரோட்டத்தின் காரணமாக அதிக அளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டு போல் காட்சியளிக்கிறது. படகுகளை கடலுக்குள் செலு த்தவும், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று விட்டு, மீண்டும் கரை திரும்பும் பொழுது துறைமுக வாய்க்காலுக்கு படகுகளை எடுத்து வருவதுமான மிகச் சிரமமான சூழ்நிலையில் மீனவர்கள் உள்ளனர். இதனால் மிகக் குறைந்த நாட்களே அதாவது, மாதத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே தொழில் செய்ய வேண்டிய நிலை இவர்களுக்கு உள்ளது. வாரத்திற்கு ஒருமுறை கடும் முய ற்சியில், உடல் உழைப்போடு அதிகப்ப டியான தொகை செலவு செய்து, இந்த மணல் திட்டுகளை மீனவர்களே அகற்றி வரும் நிலை உள்ளது. இதனால் மீன்பி டித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இவர்களது வாழ்வாதாரம் கேள்வி க்குறியாகி உள்ளது. இதுபற்றி இப்பகுதி மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வள த்துறை உதவி இயக்குனர் ஆகியோரு க்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இதேபோல மீனவர்கள் மட்டுமல்லா மல் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலமா கவும் கோரிக்கை மனு அனுப்பப்ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மீனவர்களின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு, இவர்கள் மீன்பிடிக்கச் செல்ல ஏதுவாக மணல் திட்டுக்களை அகற்ற அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று இப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.