tamilnadu

img

பூதலூர் சாலையை சீரமைக்க கோரிக்கை  

தஞ்சாவூர், செப்.30- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி சரகம், மனையேறிப்பட்டி, வெண்டயம்பட்டி, இராயமுண்டான்பட்டி, சொரக்குடிப்பட்டி மற்றும் புதுக்குடி வரை அமைந்துள்ள சாலைகளை சீர்படுத்த வலியுறுத்தி, திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் 1-ல் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சு.பொன்னு, நெடுஞ் சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறி யாளர் அன்சாரி ராஜா, திருக்காட்டுப்பள்ளி சரக வருவாய் ஆய்வாளர், செங்கிப்பட்டி, பூதலூர் காவல் துறை ஆய்வா ளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், விஜயகுமார், சுகுமாறன், ராஜா, முகமது சுல்தான், தமிழ்செல்வி, ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், கிராமங்களில் சாலையை சரி செய்வது தொடர்பாக, ஒரு வார காலத்திற்குள் ஆய்வு செய்து முடிவெ டுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப் பட்டது. இதையடுத்து சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.