tamilnadu

img

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கருவறையை சுற்றியுள்ள சோழர்கால ஓவியங்களை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோயிலின் கருவறையை சுற்றியுள்ள சோழர்கால ஓவியங்களை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான வழக்குரைஞர் வெ.ஜீவக்குமார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, இந்திய தொல்லியல் துறை உரிய பதிலை அளித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள சோழர்கால ஓவியங்கள் 1930-ம் ஆண்டு வரை உலகத்தின்பார்வைக்கு தெரியாமல் இருந்தன. 1930ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு வருகை புரிந்த அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் கருவறை திருச்சுற்றுப்பாதை சுவர்களில் இருந்த நாயக்கர் கால ஓவியங்களை பார்வையிட்டபோது, ஓவியங்களுக்கும் கீழ் நாயக்கர் காலஓவியங்களுக்கும் முற்பட்ட ஓவியங்களின் வண்ணங்கள் இருப்பதை பார்த் தார். மிகக் குறுகலான பாதையில் வெளிச்சம் மட்டும் இருந்த கருவறை சுற்றுப் பாதை சுவர்களை மீண்டும் 1931ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 -ம் நாள் பார்வையிட்ட இவர், மேற்கு சுவர் பகுதியை விரிவாக ஆய்வு செய்து நாயக்கர் கால ஓவியங்களுக்கு கீழே சோழர் கால ஓவியங் கள் பல மறைந்துள்ளதை பார்த்து வியப்படைந்து, பின்னர் இதனை உலகுக்கு தெரியப்படுத்தினார்.

பெரிய கோயிலில் உள்ள ஓவியங்கள் சுதை ஓவிய தொழில்நுட்பத்தை சார்ந்தவை. முழுவதும் கருங்கற்களால்கட்டப்பட்ட விமானத்தின் கருவறையைச் சுற்றி குறுகிய பாதையில் உள்ளசுவர்களில் சிறிய அளவில் சுண்ணாம்புக்கலவையைப் பூசி அக்கலவை ஈர நிலையில் இருந்தபோது ஓவியங்களை தீட்டியுள்ளனர். சுதை ஓவிய முறையில் நேர்த்தியாகவும் நீண்டநாட்கள் இருக்கக் கூடியதாகவும் இந்த ஓவியங்கள் அமைந் துள்ளன.சுதை ஓவியங்கள் அமைக்கும் கலை, தமிழகத்தின் வரலாற்று தொடக்ககாலத்தில் இருந்தே நிலவி வருகிறது.பெரிய கோயிலின் கருவறை சுற்றுப்பாதையின் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சோழர்கால ஓவியங்களை காண, கருவறையின் முன் உள்ள இடைவெளி பகுதி வழியாக செல்ல முடியும். தற்போது இவ்வழியே மூலவர் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நீண்ட பெரிய கதவுகளை கொண்டுஅடைத்து விட்டனர்.

ஓவியங்களைப் பார்ப்பதற்கு தற்போது பெரிய கோயிலின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தி மாடத்துக்கு அருகில் வாயில் போன்ற அமைந்துள்ளநீண்ட பலகணி வழியே பயன்படுத்துகின்றனர். இப்பலகணியில் ஏறி செல்ல வேண்டும். இவ்வழியாக சென்றால் கருவறை திருச்சுற்று வழியில் இரு பக்கசுவர்களிலும் எழிலார்ந்த ஓவியங்களைக் காணலாம்.இந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரச குடும்பத்தினர், அரசர்கள், புலவர்கள், பொதுமக்கள், நடை, உடை, அணிகலன்கள், வழிபாடு, வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.சோழர் கால ஓவியங்கள் பல அழிந்தநிலையில் தற்போது காணப்படும் இந்தஓவியங்களை இளைய தலைமுறையினரும் நேரில் கண்டு தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு தொல்லியல் துறைஅனுமதி வழங்க வேண்டும் என சமூகஆர்வலரும், “ராஜராஜம்” நூலின் ஆசிரியருமான வழக்குரைஞர் வெ.ஜீவக் குமார் இந்திய தொல்லியல் துறையினருக்கு தகவல் அறியும் சட்டத்தின் படி கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பி
யிருந்தார்.இதைத்தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையின் உதவி பராமரிப்பு அலுவலர் கடந்த 21-ஆம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில், “இந்த ஓவியங்கள் பாதுகாக்கப்பட்ட ஓவியங்களாக இருப்பதால், பாதுகாப்பு கருதி அதனைநேரில் பார்வையிட முடியாது, அதற்குபதிலாக அந்த ஓவியங்களின் புகைப் படங்களை கோயிலின் தென்புறத்தில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த ஏற் பாடுகள் செய்யப்படும்” என பதில் தெரிவித்துள்ளனர்.

பெரிய கோயிலில் உள்ள ஓவியங்கள் சுதை ஓவிய தொழில்நுட்பத்தை சார்ந்தவை. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட விமானத்தின் கருவறையைச் சுற்றி குறுகிய பாதையில் உள்ளசுவர்களில் சிறிய அளவில் சுண்ணாம்புக்கலவையைப் பூசி அக்கலவை ஈர நிலையில் இருந்தபோது ஓவியங்களை தீட்டியுள்ளனர். சுதை ஓவிய முறையில் நேர்த்தியாகவும் நீண்டநாட்கள் இருக்கக் கூடியதாகவும் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.