tamilnadu

img

இராஜராஜன் பள்ளியில் பொங்கல் விழா

தஞ்சாவூர், ஜன.11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள உடையநாடு - வீரியங்கோட்டை இராஜராஜன் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார்.  தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் விவசாயம் குறித்த, உழவு, நடவு, களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், அறுவடை, நெல்லை தூற்றல், நெல்லை உரலில் இட்டு இடித்து, அரிசியாக்கி பொங்கல் வைத்தல் என அனைத்தையும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் காட்சிப்படுத்தி இருந்தனர். பின்னர் அனைத்து மாணவ, மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து விவசாயம் தொடர்பான பாரம்பரிய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது. பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

;