tamilnadu

img

கஜா புயலில் சேதமாகி ஓராண்டாகியும் சீரமைக்கப்படாமல் மூடிக் கிடக்கும் அரசு கயிறு ஆலை

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, அரசு கூட்டுறவு கயிறு தொழிற் சாலை கடந்த ஓராண்டாக மூடிக் கிடக்கிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இதனை உடனடியாக சீரமைத்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ளகுருவிக்கரம்பை கிராமத்தில், அரசுக்கு சொந்தமான கயிறு மற்றும் கயிறுஉற்பத்தி கூட்டுறவு சங்கம்உள்ளது. இதில் கயிறு மற்றும் அதனைச் சார்ந்த உபதொழில்களில் நேரடியாக 50 பேரும், மறைமுகமாக 50 பேரும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 16 ஆம் தேதி வீசியகஜா புயலில் குருவிக்கரம்பை கயிறு உற்பத்தி கூட்டுறவுசங்கத்தின், மேற்கூரை மற்றும் கட்டிடம் சேதமடைந்தது. மின் இணைப்பும் பாதிக்கப் பட்டது. அதன் பிறகு கடந்த14 மாத காலமாக செயல்படாமல் உள்ளது. மேற்கூரைசேதமடைந்த நிலையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், தளவாடப் பொருட்கள் மழையிலும், வெயிலிலும், கிடந்து வீணாகிவருகிறது. மேலும் தொழிற் சாலை கதவுகள் உடைந்து கிடப்பதால் இயந்திரங்கள், தளவாடப் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 

இதுகுறித்து கூட்டுறவுசங்கத்தின் தலைவரும், முன் னாள் மாநில கயிறு வாரியத் தலைவருமான நாடாகாடு எஸ்.நீலகண்டனிடம் கேட்டபோது, “இதுகுறித்து மாவட்ட தொழில் மையத்திற்கு தகவல் அளிக்கப்பட் டுள்ளது. அதிகாரிகள் வந்துபார்வையிட்டு, ரூ.5 லட்சம்செலவாகும் என திட்ட அறிக்கை தயார் செய்து சென்றுள்ளனர். ஊரக தொழிற்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்துள்ளோம். விரைவில் பணிகள் தொடங்கும் எனகாத்திருக்கிறோம். தொழிலாளர்கள் வேலை இல்லாமல்உள்ளது கவலையளிக்கிறது” என்றார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டுறவு கயிறு தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;