தஞ்சாவூர், மார்ச் 25- ஊரடங்கு உத்தரவை மீறி, தஞ்சையில் முக்கிய வீதிகளில் பொறுப்பில்லாமல் சுற்றிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். கொரோனா வைரஸ் எதிரொ லியை அடுத்து, நாடு முழுவதும் 144, ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் நகரத்தில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், காந்திஜி சாலை, கீழவாசல் உள்ளிட்ட பகுதி களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான மருந்து, காய்கறி, மளிகை கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள் ளன. இக்கடைகளிலும் கூட்டம் குறை வாகவே இருந்தது. இருப்பினும் பல்வேறு அத்தியாவசிய கடை களில், 1 மீட்டர் இடைவெளி நிற்கும் படி, கோடுகள், கட்டங்கள் வரைந்து வைத்திருந்தனர்.
வாடிக்கையாளர்க ளும் அவற்றை பின்பற்றி வரிசையில் நின்று பொருட்களை வாங்கினர். ஊரடங்கு உத்தரவையொட்டி மாநகரில் 99 சதவீத மக்கள் வீட்டி லேயே முடங்கினர். இந்நிலையில், இளைஞர்கள் பலரும் டூ விலர்களில் வீதிகளில் சுற்றி திரிந்தனர். சிலர் சாலையின் நடுவே நின்று செல்பி எடுத்துக் கொண்டும், தாறுமாறாக வண்டியை ஓட்டியபடியும் சுற்றினர். கொரோனா பாதிப்பு தன்மை குறித்து தெரியா மல், இப்படி இளைஞர்கள் ஜாலியாக சுற்றி வருகிறார் என பலரும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, பழைய பேருந்து நிலையம், காந்திஜி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர், டூ விலர்களில் சென்றவர்களை நிறுத்தி விசாரித்து, வீட்டில் இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். காரண மின்றி வீதிகளில் ஜாலியாக சுற்றி திரிந்த இளைஞர்கள் மீது, லேசான தடியடி நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். சிலரது டூ விலர்களை யும் பறிமுதல் செய்து கொண்டு அனுப்பினர்.