tamilnadu

மனோரா சுற்றுலாத் தலத்தில் மதுக்கடையை திறக்கக் கூடாது மீனவர் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.9- தஞ்சை மாவட்ட விசை ப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை, மல்லிப்பட்டினம் புதிய துறை முக வளாகத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொ துச் செயலாளர் ஏ.தாஜூ தீன் தலைமையில் நடை பெற்றது. தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்டச் செயலாளர் வடுக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  “தஞ்சாவூர் மாவட்ட கடற்கரைப் பகுதியில் தங்கு  கடல் என்ற பெயரில் நாள் தவ றாமல் 24 மணி நேரமும் கட லிலேயே தங்கி மீன்பிடித்து வரும் காரைக்கால், நாகப்ப ட்டினம் போன்ற பகுதிகளில்  இருந்து வரும் விசைப்படகு களால், தஞ்சை, புதுக்கோ ட்டை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீன வர்கள் பெருமளவில் பாதிக்க ப்படுகின்றனர்.  இதனால் மீன்பிடி தொ ழில் பாதிக்கப்படுவதோடு, வலைகள் சேதம் அடை கின்றன. மேலும் நாட்டுப்ப டகு, விசைப்படகு மீனவர்க ளுக்கும் பெரிய அளவில் தொழில் பாதிப்பு ஏற்படு கிறது.  இப்பகுதியில் விசை ப்படகுகள் வாரத்தில் 3 நாட்களும், நாட்டுப்படகுகள் 4 நாட்களும் தொழில் செ ய்வது என புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, பல ஆண்டுகளாக இது போல இயங்கி வருகின்றனர்.  காரைக்கால், நாகை மா வட்ட அதிவேக விசைப்பட குகளால், கடலில் மீன்வளம் குறைந்து தஞ்சை மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மேற்க ண்ட மாவட்ட விசைப்படகு களை கண்டறிந்து அப்புற ப்படுத்தி, இப்பகுதி மீன வர்கள் வாழ்வாதாரம் பாதி க்காமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் சட்டத்திற்குப் புறம்பான வலைகளையோ, கரையோரம் மீன்பிடித்த லையோ நமது சங்க உறுப்பி னர்கள் யாரும் செய்யக் கூடாது. அப்படி யாரும் இதுபோன்று செய்து ஆதா ரத்துடன் நிரூபிக்கப்பட்டால் சங்கத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீன்வளத்துறையிடம் ஒப்ப டைக்கப்படுவர். தஞ்சை மாவட்ட மீன வர்கள் கஜா புயலால் படகு களை இழந்து, அரசால் நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் தொகை குறை வாக இருப்பதால், நிவாரணத் தொகையை உய ர்த்தித் தரவேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை  நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, நிவார ணத்தை உயர்த்தி வழங்க  அதிகாரிகளும், மீன்வள த்துறை அமைச்சரும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் தொழில் செய்யும்  மீனவர்களை மீன்வளத் துறையினர் மிரட்டுவதையும், தொழில் செய்ய டோக்கன் வழங்க மறுப்பதையும் கைவிட்டு, சட்டத்திற்குப் புறம்பான வகையில் தொ ழில் செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.  கிழக்கு கடற்கரை சா லையில் உள்ள மல்லிபட்டி னம் மனோரா குளோபல் வில்லேஜில் அரசு மது பான கடையை மீண்டும் திறப்பதற்கான முயற்சி நடை பெறுகிறது. இது சுற்றுலாத் தலமாக இருப்பதால் இங்கு  வந்து செல்லும் பொது மக்கள், பெண்கள், சிறார்க ளுக்கு இடையூறாக இருப்ப தால், இப்பகுதியில் மீண்டும்  மதுக்கடையை திறக்க அனு மதிக்க கூடாது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.