tamilnadu

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

உழவர் கடன் அட்டை பெற  விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், பிப்.11- மத்திய அரசின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் பயன் பெற்ற விவசாயி கள் மற்றும் தகுதியுள்ள அனைத்து விவ சாயிகளும் உழவர் கடன் அட்டை பெற்று பயன் பெறலாம்.  இதனை பெற விரும்பும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாய, சேமிப்புத் திட்ட கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி உழவர் கடன் அட்டை யை பெற்று, மானியச் சலுகையுடன் வங்கி கடன் பெறலாம். ஏற்கெனவே கடன் அட்டை பெற்றுள்ள விவசாயிகள் தங்கள் வங்கி கிளையை அணுகி கடன் தொகை யின் வரம்பை உயர்த்த விண்ணப்பிக்க லாம்.  மேலும், செயல்படாத உழவர் கடன் அட்டை வைத்துள்ளோர் வங்கிகளை அணுகி அதனை மீண்டும் செயல்படுத்த வும், புதிய கடன் வரம்பிற்கு அனுமதி யும் பெறலாம். உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவ ணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு தங்களது வங்கிக் கிளைகளை அணுகலாம். உழ வர் கடன் அட்டைதாரர்கள் கால்நடை மற்றும் மீன் பிடிப்பதற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சேர்ப்பதற்காக வங்கிக் கிளையை அணுகலாம்.  விவசாயிகள் கடன் அட்டை பெறு வதற்கு, இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். விவ சாய பயனாளிகள் ஒரு பக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிர் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிகளிலும் கடன் அட்டை பெற வில்லை என்பதற்கான உறுதிப்பிரமாணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பொது இ-சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 
மயிலாடுதுறை, பிப்.11- ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கங்களின் அறிவுறுத்தலின் படி “கரோனா வைரஸ் தடுப்புக்கான நடைமுறைகள்” என்ற தலைப்பில் விழிப் புணர்வு நிகழ்ச்சி செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களால் இணைந்து நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டம் காளி கிராமத்தின் வட்டார மருத்துவ அதிகாரி சு.சரத்சந்தர் கரோனா நோயிலி ருந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என விழிப் புணர்வு உரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.சுந்தர்ராஜ் வரவேற்றார். கல்லூரியின் இயக்குனர் நிர்வாகம் முனைவர் எம். செந்தில் முருகன், துணை முதல்வர் முனைவர் எஸ். செல்வ முத்துக்குமரன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் செஞ்சுருள் சங்க ஒருங்கி ணைப்பாளர் ஏ.அருண்பாண்டியன் அறி முகம் உரையாற்றினார். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கே.சிவராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.

முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
புதுக்கோட்டை, பிப்.11- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆன்லைன் கலந்தாய்வில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி பணிநியமன ஆணை களை செவ்வாய்க்கிழமையன்று வழங்கினார்.  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தின் மூலம் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசி ரியர்களுக்கு 9.2.2020 மற்றும் 10.2.2020 வரை புதுக்கோட்டை மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 24 ஆசிரியர்களும் பிற மாவட்டங் களிலிருந்து 92 ஆசிரியர்களும் புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள காலி பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும், தேர்வு பெற்ற 116 ஆசிரியர் களுக்கும் பணியிடத்திற்கான ஆணை கள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

ஏவிசி கல்லூரி பொருளியல் மன்றக் கூட்டம்
மயிலாடுதுறை, பிப்.11- மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் பொருளியல் மன்ற கூட்டம் நடைபெற் றது. கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். தர்மபுரம் ஞானா ம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர். கே. ராமு, 2019 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு குறித்து பேசினார். பொருளாதாரத் துறை தலைவர் டாக்டர் ஆர். கார்த்திகேயன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர் எம். மகா லெட்சுமி துணைப் பேராசிரியர் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். பொருளியல் மன்ற செய லர் ஏ. ரப்பேல்ராஜ் நன்றி கூறினார்.