கும்பகோணம், ஜூன் 30- கும்பகோணத்தை புதிய மாவட்டமாகவும் நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், அம்மா பேட்டை ஆகிய பகுதிகளை புதிய தாலுகா வாக அறிவிக்க கோரி அனைத்து கட்சி மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் கும்பகோ ணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி, திராவி டர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, சிபிஐ(எம்எல்), திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.