கும்பகோணம், பிப்.13- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் மேலக்காவேரி கீழத்தெருவில் இலவச வேட்டி சேலை கொடுக்காமல் எலி கடித்து நாசமாகின. தமிழக அரசால் பொங்கல் பரிசாக வேட்டி சேலை வழங்கப் பட்டது. இதில் கும்பகோணம் மேலக்காவேரி 5 வது வார்டு கீழத்தெருவில் சுமார் 600 குடும்பங்களுக்கு உரிய இலவச வேட்டி சேலை பொங்கல் பண்டி கையையொட்டி வந்தது. அப் போது உள்ளாட்சித் தேர்தல் அறி விக்கப்பட்டதால் தேர்தலை கார ணம் காட்டி ஒரு தனியார் வீட்டில் மேலக்காவேரி ரேஷன் கடை அருகில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலை களை மூட்டை மூட்டையாக பாதுகாப்பற்ற நிலையில் அடுக்கி வைத்தனர். அது தற்போது அந்த பாழ டைந்த வீட்டின் பக்கத்தில் ரேஷன் கடையில் உள்ள உப்பு போன்ற பொருட்களும் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் இல வசமாக கொடுக்க வேண்டிய புதிய வேட்டி சேலையை எலி கள் கடித்து நாசம் செய்து வரு கிறது. இதுகுறித்து அப்பகுதி வரு வாய் துறை கிராம நிர்வாக அலு வலர் வேட்டி சேலை வழங்கு வதில் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. ரேஷன் கடை விற்பனையாள ரிடம் கேட்டால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என தெரிவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்ற னர். மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் பொங்கல் வேட்டி, சேலைகள் எலிகள் கடித்து நாசமாகி பயனற்றுப் போகிறது. ஆகவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இலவச வேட்டி சேலை களை பொதுமக்களுக்கு வினி யோகம் செய்ய வேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.