தஞ்சாவூர், ஆக.18- தமிழகத்தின் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிய வேறுபாட்டை தூண்டும் விதமாக சாதி அடையாளக் கயிறு அணிவதை ஊக்குவிக்கும் கிரிமினலுக்கு துணைபோவதா என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தஞ்சையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3 ஆவது மாநில மாநாடு ஆக.15 வியாழக்கிழமை அன்று எழுச்சியுடன் தொடங்கி, ஆக.17 சனிக்கிழமை அன்று பல்லா யிரக்கணக்கானோர் பங்கேற்ற சாதி ஒழிப்பு பேரணியுடன் நிறைவுபெற்றது. நிறைவாக, திலகர் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில சிறப்புத் தலைவர் பி.சம்பத் தலைமை வகித்து பேசுகையில், “கிராமப்புறங்களில் இன்றைக்கும் நடை முறைப்படுத்தப்படுவது அம்பேத்கரின் அரசியல் சட்டமல்ல. மனுநீதி சட்டம் தான். தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி எடுத்தால் மட்டும் போதாது. அதனை உளப்பூர்வமாக களைய வேண்டும். எங்கும் இல்லாத அளவிற்கு சாதிக் கொடுமைகள் இந்தியாவில் தலை விரித்தாடுகிறது. உலகில் இந்தியா தவிர எந்த நாட்டிலும் சாதி இல்லை. ஐரோப்பிய நாடு களிலோ அல்லது வேறு எங்காவது ஏதேனும் சாதியப் பாகுபாடுகள் உண்டென்றால் அங்கே இந்தியன் இருக்கிறான் என்று தான் சொல்ல முடியும். தீண்டாமையை ஒழிக்கும் பணியை அரசு செய்யவில்லை. ஆனால் அதற்கான பணி களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையில் எடுத்துள்ளது” என்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், “சாதியை ஒழிக்க வாருங்கள் என்று தந்தை பெரியார் அழைத்த இதே திடலில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சாதியை ஒழிக்கும் பேர ணிக்கு நாங்கள் வந்திருக்கிறோம் என்று சிலர் பேசியதைக் கேட்டேன். சாதி ஒழிப்பில் பேரணி மட்டும் நாங்கள் நடத்தவில்லை. வரலாற்றில் உன்னதங்களை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். காற்றுப்புகாத இடத்தில் கூட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் களமாடி இருக்கிறோம். அழுத கண்ணீரைத் துடைத்திருக்கிறோம். எங்கள் வியர்வையை மட்டுமல்ல; அசோக் போன்ற இளைஞர்களின் ரத்தத்தையும் இந்த மண்ணிற்கு நாங்கள் காணிக்கையாக்கி இருக்கிறோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
“தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தலித் இயக்கங்களும் எங்களோடு கரம் கோர்த்து இருப்பது சாதாரண நிகழ்வு அல்ல. அவர்களின் இதயத்தில் குடியிருக்கிற அமைப்பாக தீண்டா மை ஒழிப்பு முன்னணி மாறி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் சாதியத்தை மறுகட்டமைப்பு செய்யும் பணியில் ஆதிக்க வெறி சக்திகள் உள்ளன. பள்ளிகளில் சாதி அடை யாளக் கயிறு அணிவதை தடை செய்யும் உத்தரவை அமலாக்க வேண்டாம் என்ற தமிழக கல்வித்துறை அமைச்சரின் உத்தரவுக்குப் பின்னால் எச்.ராஜா என்ற கிரிமினல் இருக்கிறார்” என்றும் அவர் குற்றம்சாட்டினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுயேச்சையான அமைப்பாக இருந்தாலும், அதன் ஆதார சக்தி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. கட்சிகளெல்லாம் சாதியாக இயங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் சாதிக்கு வெளியே, சாதி கடந்தவர்களை வைத்து கட்சி நடத்துகிற ஒரே இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வரலாறு படைத்துக் கொண்டு இருக்கிறது என்றும் அவர் கூறினார். சு.வெங்கடேசன் எம்.பி., முன்னதாக, சாதி ஒழிப்பு பேரணியை தொடங்கி வைத்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில்,
‘‘எல்லா விதத்திலும் அசமத்துவத்தையே தனது குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிற ஒரு மத்திய அரசு; அதற்கு செவிசாய்த்துக் கொண்டி ருக்கிற மாநில அரசுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம். எல்லாவிதமான பாகுபாடுகளையும் நியாயப்படுத்துகிற, புனிதத்தை பூசுகிற பழமைவாதமே இன்றைக்கு அரசின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பழமை வாதத்துக்கு எதிராக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ்ச் சமூகத்தின் அடி நாதத்தைப் பற்றிக் கொண்டு தீண்டாமைக்கு எதிராக முன்னிலும் வேகமாகச் செயல்படு வோம். சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்க ளையும் இணைத்து வீரியமிக்க போராட்ட த்துக்கு கட்டியம் கூறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நடத்துகிற சாதி ஒழிப்புப் பேரணி’’ என்று கூறினார்.