tamilnadu

img

தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வூதியருக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

 தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்க ளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதுகுறித்து பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணி யன் தெரிவித்ததாவது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பல்கலைக்கழ கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு விரி வுபடுத்த ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு, 20.11.2019 அன்று யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் புரிதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு செயல் படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு நபர் ஒருவருக்கு ஆண்டு சந்தா தொகையாக ரூ.4,484- செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர் ஒருவரின் மாத ஊதியத்திலிருந்து ரூ.350 வீதம் ஒரு வருடத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.4,200 போக நிகரத் தொகை ரூ.284- பல்கலைக்கழகப் பங்காக செலுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் சேர இசைவு தெரிவித்த 153  நபர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.6,86,052-ம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் உரிய நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்  மருத்துவச் சிகிச்சைக்காக உள்நோயாளியாக இருக்கும் நிலையில் சிகிச்சை யின் தன்மையினைப் பொறுத்து மருத்துவ செலவினமாக முறையே ரூ.4,00,000- முதல் 7,50,000-வரை அரசாணைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.  இதுகுறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்குப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டையை துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் வழங்கினார்.