tamilnadu

img

அதிராம்பட்டினத்தில் சமூக பண்பலை வானொலி ஆண்டு தொடக்க விழா

தஞ்சாவூர், டிச.29- ‘நமது சமூகம், ‘நமது நலன்’, என் பதை குறிக்கோளாகக் கொண்டு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிப் பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிரா மப்புற பகுதிகளின் சமூக மேம்பாடு, கல்வித் தரம், ஆரோக்கியம், மருத்து வம், விவசாயம், தொழில், சுற்றுச்சூழல்  பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகிய வற்றில் மேம்பாட்டிற்காக, அதிராம் பட்டினம் தொழில் அதிபர் ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்களால் சமூக பண் பலை வானொலி நிலையம் அதி ராம்பட்டினத்தில் நிறுவப்பட்டது. இந் நிலையத்தை, கடந்த 18-12-2016 அன்று அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இந்நிலையில், சமூக பண்பலை வானொலியின் 4-வது ஆண்டு தொடக்க விழா - நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. நிகழ்ச் சிக்கு, அதிரை எப்.எம்-90.4 நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார்.  இலங்கை சர்வதேச வானொலி அறிவிப்பாளர் பி.எச் அப்துல் ஹமீது கலந்துகொண்டு பேசியது; ‘அந்தக் காலத்தில் சமூக வானொலியின் முக்கி யத்துவம் உணரப்படவில்லை. ஆனால், இப்போது அதன் அவசி யம் உணரப்பட்டுள்ளது. வானொலி என்பது அன்றும், இன்றும், இனி என்றும் மிக சக்தியுள்ள ஒரு சாதனம். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என் பதை பலர் மறந்திருக்கும் நிலையில், சமூக வானொலிகளால் மட்டும்தான் அந்த பெரும்பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும். காரணம், சமூக வானொ லியில் அரசியல், சமயம் போன்றவை ஒலிபரப்ப அனுமதியில்லை. சமூக மேம்பாடு, விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்வளம், மீனவர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி கள் ஒலிப்பரப்படுகிறது.  வெறும் பொழுதுபோக்கை மைய மாகக்கொண்டு இயங்கும் வானொலி கள் மத்தியில், மக்களின் கவனத்தை சமூக வானொலிகள் திருப்பி விடு கின்றன. மக்களுக்கு முதலில் தேவை கல்வி, அதையடுத்து தகவல், அதனை அடுத்துதான் பொழுதுபோக்கு. எனவே, சமூக வானொலிகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலை நாடுகளில் இந்த சமூக வானொலிகள் பெரும் பணியை ஆற்றிருக்கின்றன. நேயர்கள் வட்டம் சிறிதாக இருந்தா லும் கூட தன்னைத்தானே மேம்படுத்தி கொள்ள வேண்டும். தன்னுடைய வாழ் வியலை மேம்படுத்திக்கொள்ள வேண் டும் என்று நினைக்கும் ஒவ்வொரு மனி தனும் தன்னுடைய வாழ்க்கை பொழுது களை வீணாக்காமல் நினைக்கும் ஒவ் வொருவரும் இந்த சமூக வானொலி யின்பால் செவிகளை திருப்புவார்கள்’ என்றார்.  மேலும், சமூக வானொலியில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சி பற்றிய கருத்து, சமூக மேம்பாட்டிற்கு வானொ லியின் பங்கு, வானொலியில் பணி யாற்றிய தனது அனுபவங்கள் உள் ளிட்ட நேயர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பி.எச் அப்துல் ஹமீது பதிலளித்துப் பேசினார். முன்னதாக, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வரவேற்றுப்பேசினார். பேராசி ரியர் கே.செய்யது அகமது கபீர் விருந்தி னர் அறிமுக உரை நிகழ்த்தினார். என். இசட். அகமது முனாவர் வாழ்த்துரை வழங்கினார். மு.செ.மு ராபியா, வானொலி அறிவிப்பாளர் கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்த ளித்தனர். நிறைவில், இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அதிரை எப்.எம்-90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழு வினர், ஊர் பிரமுகர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

;