கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுார் கூட்டுறவு சங்கங்களில் இயக்குந ருக்கான தேர்தல் நடத்த வேண்டும் என அறிவித்து, கடந்த 2018 மார்ச் மாதம் 26-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கூட்டுறவு சங்கத்தில் உள்ள திமுகவினரின் வேட்புமனுவை நிராகரித்து விட்டு, அதிமுகவினர் போட்டியின்றி தேர்வானார்கள். இது குறித்து திமுகவினர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதை மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி உடையாளூர் கூட்டுறவு சங்கத்தின் 11 இயக்குநர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்றது. தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் அ.ம.மு.க.வினர் 11 இயக்குநர்களுக்கும் போட்டியிட்டனர். இதனால் அ.ம.மு.கவினருக்கும், அ.தி.மு.கவி னருக்கும் மோதல் முற்றி கல்வீச்சு கலவரம் வரை சென்றது. இதில் கலவரத்தைக் கட்டுப் படுத்த வந்த போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மார்ச் 3 ஆம் தேதி உடையாளூர் கூட்டுறவு சங்கத்திற்கும், வரும் 6 ஆம் தேதி மருதாநல்லூர் கூட்டுறவு சங்கத்தி ற்கும் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து செவ்வாய் அன்று நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் தி.மு.க வைத் தோற்கடிக்க அ.தி.மு.க.வும். அ.ம.மு.க.வினரும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக வும், அதன்படி ஏற்கனவே போட்டியிட்ட 11 பேர்களில் அ.தி.மு.க. 6 பேரும், அ.ம.மு.க. வினர் 5 பேரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெற்றி பெறும் இயக்குநர்கள் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க.வுக்கும். இயக்குநர் பதவிகளை அ.ம.மு.க.விற்கும் பகிர்ந்து கொள்வதற்கான ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.