tamilnadu

img

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் நிறுவனர், கல்லூரி நாள் விழா

தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ். செல்வம் தலைமை வகித்தார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஏ. முகைதீன் மரைக்காயர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர்(பொ) பி. சீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தார். “டிலோட் இந்திய” இயக்குனர் மகேஷ் வெங்கட்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்வி, விளையாட்டு மற்றும் பல் கலைகளில் சிறந்து விளங்கிய மூன்று மாணவர்களுக்கு “எஸ்.டி.எஸ் விருது கள்” வழங்கப்பட்டன. இவ்வாண்டிற் கான நல்லாசிரியர் விருது முதலா மாண்டு துறைத்தலைவர் எஸ்.அருள் நெல்சனுக்கு வழங்கப்பட்டது. மேலும், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் நடை பெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன.