tamilnadu

img

மின்வாரிய கேங்மேன் பயிற்சி வகுப்பு  

தஞ்சாவூர்: மின்வாரியத்தின் கேங்மேன் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா தஞ்சையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பி.காணிக்கைராஜ் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் து.கோவிந்தராஜூ வகுப்புகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  ஓய்வு பெற்ற மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் ஆர்.கிருஷ்ணானந்தம், ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் பொறிஞர் ஞானமனி ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிறைவு நாளில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் வாழ்த்திப் பேசினார். கிளை பொருளாளர் எம்.ஆரோக்கியசாமி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

;