tamilnadu

img

தமிழில் தபால் தேர்வுக்காக தீர்மானம் திமுக வலியுறுத்தல்: அதிமுக மறுப்பு

சென்னை,ஜூலை 15- தமிழில் தபால் தேர்வு நடத்த  மத்திய அரசை வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக வலியுறுத்தியது. திங்களன்று(ஜூலை15) கேள்வி நேரத்திற்கு பிறகு, தபால்  துறையின் தேர்வில் தமிழ் மொழி  புறக்கணிக்கப்பட்டது குறித்து  திமுக உறுப்பினர்  தங்கம்தென்ன ரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், “தபால் துறை யில் போட்டித் தேர்வுகளை ஆங்கி லம்-இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்று மத்திய பாஜக  அரசு  திட்டமிட்டு செய்திருக்கி றது. தமிழ் மற்றும் மாநில மொழி களில் தேர்வு நடத்தக் கூடாது  என்ற அறிவிப்பு மூலம் ஒரு மைப்பாட்டை கட்டி காப்பதி லிருந்து மத்திய அரசு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இது மிகவும் வருத்தம் அளிக்கி றது. மத்திய பாஜக அரசு திட்ட மிட்டே தமிழை ஓரம் கட்டவும், இந்தியை திணிக்கவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டை சேர்ந்த இளை ஞர்கள் வேலைவாய்ப்பை பெற வும் அவர்களின் உரிமையை பாது காக்கவும் தமிழில் தபால் துறை தேர்வு எழுத அனுமதிக்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இருமொழி கொள்கை....

இதற்கு பதில் அளித்த அமைச்  சர் டி. ஜெயகுமார், “இருமொழி கொள்கைகளில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. மாநில  மொழி களுக்கும் மத்திய அரசு  உரிய உரிமை கொடுக்க வேண்  டும் என்பதை இந்த அரசு வற்புறுத்தும். மக்களவையில் இதற்காக உங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்கள். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு முயற்சி எடுக்கும்” என்றார்.

உண்டா? இல்லையா?

அப்போது குறுக்கிட்ட துரை முருகன், “அமைச்சர் அளித்த பதில் அழுத்தமாக இல்லை. இரு மொழி கொள்கை என்கிறார். ஒரு மித்த கருத்து இருக்கிறது. ஆனால் தீர்மானம் நிறைவேற்று வோம் என்று குறிப்பிடாமல் வற்பு றுத்துவோம் என்று மட்டுமே கூறு கிறார் என்று ஆதங்கப்பட்டார்”. “எங்கள் உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள். அதுபற்றி பிரச்சனை இல்லை. அதை விட  நாம் அனைவரும் இணைந்து 234  உறுப்பினர்கள் கொண்ட இந்த  சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றுவது தான் பலமிக்கதாக இருக்கும். எனவே, இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் உண்டா? இல்லையா? என்று மீண்டும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

பொறுமை காப்போம்!

இதற்கு விளக்கம் அளித்த  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “தபால்துறை தேர்வு களில் தமிழில் நடத்த வேண்டும் என்பது நமது ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. இந்த பிரச்  சனை குறித்து இரு அவைகளி லும் அதிமுக பிரச்சனை எழுப்பு கிறது. அங்கு இதற்கு மத்திய அரசு  என்ன சொல்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் நாம் முடிவு எடுக்கலாம்” என்றார். முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, “தபால்துறை தேர் வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு ஒரு  முடிவு அறிவிக்கும் வரை பொறுத்  திருக்க வேண்டும்” என்றார்.