தஞ்சாவூர் ஆக.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாறுவேடப் போட்டி நடந்தது. தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாணவர்கள், பல்வேறு வேடம் அணிந்து போட்டியில் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சுரேஷ், பெற்றோர்கள் ராஜசேகரன்(வி.ஏ.ஒ), ஆனந்தன், கண்ணன், வினோத், ராதாகிருஷ்ணன், கணேஷ், நீலகண்டன், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.