கும்பகோணம், அக்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட இளம் கம்யூனிஸ்டு களின் மாணவர் அரங்க பயிற்சி முகாம் கும்பகோணம் அருகே உள்ள அம்மா சத்திரத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சி முகாம் நோக்கங் கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலா ளர் கோ.நீலமேகம் கல்வி நிலையம் நாம் என்ற தலைப்பில் மாநில கன்வீனர் வி.மாரியப்பன் ஆகியோர் பயிற்சி முகாமை துவக்கி வைத்து உரை ஆற்றி னார்கள். மாவட்ட கன்வீனர் கோ.அர விந்தசாமி அறிக்கையை முன்மொழிந் தார். இரண்டாம் நாள் நிகழ்வாக சனி யன்று மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற தலைப்பில் அன்வர் உசேன், கம்யூ னிஸ்ட் கட்சி வரலாறு என்ற தலைப்பில் இரா.சிந்தன் கிளர்ச்சி பிரச்சாரம் என்ற தலைப்பில் இல.சண்முகசுந்தரம் ஆகி யோர் விளக்கிப் பேசினர். பயிற்சியின் இறுதி நாளான ஞாயிறு அன்று மார்க்சி யத் தத்துவம் என்ற தலைப்பில் மாநி லக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், பண்பாடு படும் பாடு என்ற தலைப்பில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் இளம் கம்யூனிஸ்டுகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினர். நிறைவாக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் நிறைவுரை ஆற்றி இன்றைய அரசியல் குறித்து விளக்கிப் பேசினார். பயிற்சி முகா மில் வீரையன், பிரபாகரன், சிரில், இமான், ராஜாராம், விக்னேஷ் உள்ளிட்ட இளம் கம்யூனிஸ்டுகள் ஏரா ளமானோர் பங்கு பெற்றனர்.