கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து ஏழை எளிய மக்கள் தவிக்கும் நிலையில் காட்டுமன்னார்குடி அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடைய இருசக்கர வாகனத்தை அரசு உத்தரவையும் மீறி பறிமுதல் செய்த ஸ்ரீராம் தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் அந்த அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் வாகனத்தை திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளது.