கும்பகோணம், அக்.13- தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே அஸ்ஸலாம் பொறியியல் தொழில் நுட்ப கல்லூரியின் 6ம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜமால் முகம்மது இப்ராஹீம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முகம்மது உசேன், இணைச் செயலாளர் சிராஜுதீன், பொருளாளர் அன்வர் பாட்சா ரைஸ் சிட்டி பள்ளி முதல்வர் ஜைனுல் யாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராம்குமார் வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் ஷாஜ ஹான் துவக்க உரையாற்றினார். சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு இயக்கு னர் முனைவர் பாண்டியன் முதுகலை மற்றும் இளங்கலை மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை யாற்றினார். விழாவில் நிர்வாக அலுவலர் உதயகுமார் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.