கும்பகோணம், ஆக.31- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு 1984-ஆம் ஆண்டு துவக்கிய போது அரசு ஊழியர் சங்க ஸ்தாபகத் தலைவரும், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க சம்மேளன கௌரவத் தலைவரும், அரசு ஊழியர்களின் பல போராட்டங்களில் பங்கு பெற்று அரசு ஊழியர்களுக்கு நியாயமான கோரிக்கையை வென்றெடுத்து தந்த தோழர் எம்ஆர்.அப்பன் 13-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளியன்று கும்பகோணம் வட்ட கிளை அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோழர் எம்.ஆர்.அப்பன் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்ட தலைவர் ஆ.துரைராஜ் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் ஆர்.ராஜகோபாலன், இணைச் செயலாளர் வெங்கடேசன், கிளை செயலாளர் பழ.அன்புமணி, பொருளாளர் ராமமூர்த்தி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் சி.சண்முகம், கே.பக்கிரிசாமி, கலைச்செல்வி, மை.பனிமயமேரிராஜ், கண்ணன் பிரேமா, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் அ.விஸ்வேஸ்வரன், டி.ராஜகோபாலன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூ தியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் வட்டத் தலைவர் சிவராமன் நன்றி கூறினார்.