தஞ்சாவூர், மே 20- தஞ்சையில் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. ஐஎன்டியூசி ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் பேசினார். தொமுச ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.முருகானந்தம், ஏஐடியூசி ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஆர். செந்தில், சிஐடியு ஆட்டோ சங்க மாநகர செயலாளர் எம்.சுரேஷ், ஐஎன்டியுசி ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் எம்.தீபக் இளங்கோ வன், டிடியுசி ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் எம்.கண்ணன், தேமுதிக ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, பி.என். பேர்நீதி ஆழ்வார், கே.பாலமுருகன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி கள் டி.ஜோசப், ஜி.ஆறுமுகம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, ஊர டங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி வழங்கிடவும், ஆட்டோ ஓட்டுனர் அனைவருக்கும் நிபந்த னையின்றி நிவாரணம் ரூ.15,000 வழங்கிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி மே 21-ல் தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது” என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.