tamilnadu

img

பழங்கால கார்கள் கண்காட்சி

 தஞ்சாவூர், செப்.8- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முத்துவேலு முன்னிலை வகித்தார். குருவிக்கரம்பை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எழுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.  தொடர்ந்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, தமி ழிலக்கியத்தில் வினாடி-வினா மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் 420 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டுக் கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபால் பரிசு வழங்கிப் பாராட்டினார்.  இதனை தொடர்ந்து, பழங்கால கார்கள், ரோபோக்கள் மற்றும் நவீன கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியை பட்டுக்கோட்டை சார்ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற மண்டல அள விலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்பக் கட்டுரை விளக்கப் போட்டியில் திரு வாரூர், புதுக்கோட்டை மாவட்ட பாலிடெக்னிக் கல்லூரி களில் இருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு சான்றி தழ் வழங்கப்பட்டது. அமைப்பியல், இயந்திரவியல், இயந்திர மின்னணுவியல் துறை சேர்ந்த இந்திய தொழில்நுட்ப கல்விக்கழக மாணவர்கள் அமைப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இக்கண்காட்சியை பொது மக்கள், மாணவர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பார்வை யிட்டனர்.