தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பேரிடர் மேலாண்மை, முதல் நிலை தகவல் அளிப்போருக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சார்- ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் வருவாய்த்துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வா ளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நூற்றுக்கணக்கான முதல் நிலை தகவல் அளிப்போர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.