tamilnadu

img

கும்பகோணம் கோட்டத்திற்கு 14 புதிய பேருந்துகள்

கும்பகோணம், அக்.3- தமிழக அரசு சார்பில் கடந்த செப்.26ம் தேதி தமிழக முதல்வர் எட ப்பாடி பழனிச்சாமி 370 புதிய பேருந்துகளை தொட ங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கும்ப கோணம் மண்டலத்தில் வியாழனன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ  கத்தின் சார்பில் 14 பேருந்து களை அமைச்சர் துரைக்கண்ணு கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மேலும் 14 புதிய பேருந்துகளை தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, காரைக்கால், திருவாரூர், லால்குடி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் 150 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் அனுஷம், துணை மேலாளர் மார்த்தாண்டவர்மன், முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், முன்னாள் எம்பி பாரதிமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு, நடப்பு பருவ நெல்லுக்கான ஆதார நிர்ணய விலை இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.